Saturday, September 17, 2011

நக்கீரனா? நமசிவாயனா?

நமசிவாயன் கூற்று:
அங்கம் வளர்க்க அரிவாளில் நெய்தடவிப்
பங்கம் படஇரண்டு கால்பரப்பிச் - சங்கதனைக்
கீருகீர் என்றுஅறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரில் பழுதுஎன் பவன்

நக்கீரன் கூற்று:
சங்கறுப்ப(து) எங்க(ள்)குலம் சங்கரர்க்(கு)அங்(கு) ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழோம் இனி

Friday, September 16, 2011

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 10

பச்சை மிளகாய் காரம்
பன்னிரண்டு மணி நேரம்
டீச்சர் வந்தாங்க
டியூப்லைட் போட்டாங்க
வாத்தியார் வந்தாங்க
வணக்கம் சொன்னாங்க!
----------------------------------
தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணனுக்கு ரெண்டு
தம்பிக்கு ஒன்னு
பாப்பாவுக்கு ஜீரோ
தின்னத் தின்ன ஆசை!
இன்னும் கேட்டா பூசை!!