Saturday, September 25, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 3

1.
மழைவருது மழைவருது நெல்லு வாருங்கோ
நான்போய் கிணத்துல விழுறேன் என்ன பிடிங்கோ
மூணுபடி அரிசி போட்டு முறுக்கு சுடுங்கோ
ஏரு ஓட்டுற மாமனுக்கு எண்ணி வையுங்கோ
சும்மா இருக்கும் மாமனுக்கு சூடு வையுங்கோ
 
2.
கத்திரிக்கா தோட்டத்துல பூச்சிக்காரன்
எட்டி எட்டிப் பார்க்கிறான் மீசைக்காரன்
சுண்ணாம்பு சட்டியில சோறாக்கி
சுடச்சுட மாமனுக்குப் போட்டாச்சு 
என்ன குழம்பு கேட்டாச்சு
கருவாட்டுக் குழம்புடா கம்னேட்டி
 
3.
தொப்பி மாமா வந்தாராம்
தொப்பியைக் கழட்டிப் போட்டாராம்
சாக்குப் பையை எடுத்தாராம்
சரசரன்னு போனாராம்
சருக்கடிச்சு விழுந்தாராம்

2 comments:

  1. உங்கள் ஞாபக சக்தி, பிரமிக்க வைக்கிறது.

    தொடர்ந்து எழுதுங்கள். ஒரு சிறப்பான எதிர்காலம் உங்களுக்கு காத்துக்கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  2. நன்றி நண்பா! நினைவுக்கு அகப்படாத சில வரிகளை, பக்கத்து வீட்டுக் குட்டிப் பசங்க கிட்ட கேட்டு எழுதி இருக்கிறேன். (நானும் ஜெனீலியாவும் ஒன்னு...!)

    ReplyDelete