Monday, October 25, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 6

1.
இரு இரு எங்க அம்மாகிட்ட சொல்றேன்...

சொல்லிக்கோ!
சொம்பெடுத்து மாட்டிக்கோ!
ஜெயிலுக்குள்ளார பூந்துக்கோ!
கத்தி எடுத்துக் குத்திக்கோ!
'லபலப'ன்னு அடிச்சுக்கோ!

2.
எண்ணி எண்ணிப் பார்த்தா எட்டணா குறையுது
எதிர்வீட்டுப் பொண்ணு எட்டி எட்டிப் பாக்குது.
பக்கத்து வீட்டுப் பொண்ணு பல்ல பல்ல காட்டுது
நடுவீட்டுப் பொண்ணு நல்லாத்தான் சிரிக்குது

Saturday, October 9, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 5

1.
ஞாயிற்றுக்கிழமை நகையைக் காணோம்
திங்கட்கிழமை திருடன் கிடைத்தான்
செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்குப் போனான்
புதன்கிழமை புத்தி வந்தது
வியாழக்கிழமை விடுதலை ஆனான்
வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தான்
சனிக்கிழமை சாப்பிட்டுப் படுத்தான்.

2.
அயிரு வந்தாராம்
தயிரு குடிச்சாராம்
மாடிக்குப் போனாராம்
ரேடியோ போட்டாராம்
'சின்னக் குயில் பாட்டு பாடுது
அயிரு தலைக்குடுமி ஆடுது'

Friday, October 8, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 4

1.
அடே போடா நோஞ்சான்
ஒரே குத்துல சாஞ்சான்
கும்பகோணம் போனான்
குனிஞ்சு நிமிர்ந்து வந்தான்
வண்ணாரப்பேட்டை மாணிக்கம்
பேரைச் சொன்னா கோணிக்கும்

2.
எட்டெட்டும் பதினாறு
உங்கப்பன் கோனாரு
ஆத்துக்குப் போனாரு
நண்டு புடிச்சாரு
சுட்டுத் தின்னாரு
சுருண்டு விழுந்தாரு

Friday, October 1, 2010

பாத்தியாடி மாமியத்த...

தெருக்கூத்தில் கட்டியங்காரன் சொல்லும் கதைகளுள் இதுவும் ஒன்று.

ஒரு மாமியாரும் மருமகளும் ஓர் இழவு வீட்டிற்குச் சென்றார்களாம். அப்போது ஒப்பாரி வைத்துப் பாட்டுப் பாடினார்களாம். அதனடுவே அந்த வீட்டில் அவரைக்கொடிப் பந்தலைப் பார்த்துப் பாடிய பாடல் வரிகளாம் இவை. 

பாத்தியாடி மாமியத்த...
பந்தலில அவரக்காய! (மருமகள்)

பொறுத்துக்கடி மருமகளே...! 
போகும்போது பறிச்சிக்கலாம்... (மாமியார்)

அது வெரைக்கு விட்ட அவரக்காய்...
விரலால தொடாதீங்க... (வீட்டுக்காரம்மா)