Saturday, December 4, 2010

இராமாயணமும் மகாபாரதமும்

1.
முக்காலை எடுத்து மூவிரண்டு போகையிலே
ஐந்துதலை நாகம் ஆழமாய்க் கடித்தது.


பத்துரதன் புத்திரனின் மித்திரனின்
சத்துருவின் பத்தினியின்
காலை வாங்கித் தேய்
 
2.
சந்தனக் கிண்ணம் கைக்கொண்டு
நாலு பேருக்கு
நடுவே போகும் நாயகமே!
ஐமுகப் புலி
நாலு மாகாணியில் பட்டு,
எட்டு மாகாணியில் கட்டி,
பதினாறு மாகாணியில் பாய்ந்ததுவே!


சூரியனுக்குப் புத்திரன்
புத்திரனுக்குச் சத்துரு
சத்துருவுக்கு மைத்துனன்
மைத்துனனுக்கு மைத்துனன்
தாயாரைக் கேட்டால்
பதிலுண்டு மன்னவா!

அங்கன்னா அமுக்கன்னா

மாற்றாந்தாய்க் கொடுமையைப் பற்றிச் சொல்லப்பட்ட வரிகள் இவை.

கிட்டத்தட்ட முந்தானை முடிச்சு திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியைப் போல,
 
அங்கன்னா அமுக்கன்னா
இங்கன்னா தூவன்னா
சொகன்னா சோகன்னா
சொல்லப்போனா கோவன்னா