Saturday, December 4, 2010

இராமாயணமும் மகாபாரதமும்

1.
முக்காலை எடுத்து மூவிரண்டு போகையிலே
ஐந்துதலை நாகம் ஆழமாய்க் கடித்தது.


பத்துரதன் புத்திரனின் மித்திரனின்
சத்துருவின் பத்தினியின்
காலை வாங்கித் தேய்
 
2.
சந்தனக் கிண்ணம் கைக்கொண்டு
நாலு பேருக்கு
நடுவே போகும் நாயகமே!
ஐமுகப் புலி
நாலு மாகாணியில் பட்டு,
எட்டு மாகாணியில் கட்டி,
பதினாறு மாகாணியில் பாய்ந்ததுவே!


சூரியனுக்குப் புத்திரன்
புத்திரனுக்குச் சத்துரு
சத்துருவுக்கு மைத்துனன்
மைத்துனனுக்கு மைத்துனன்
தாயாரைக் கேட்டால்
பதிலுண்டு மன்னவா!

3 comments:

  1. (முக்காலை எடுத்து மூவிரண்டு போகையிலே
    ஐந்துதலை நாகம் ஆழமாய்க் கடித்தது).

    ஊன்று கோலை கையில் எடுத்து, ஆற்றில் போகையிலே
    நெருஞ்சி முள் குத்தி விட்டது.

    (பத்துரதன் புத்திரனின் மித்திரனின்)
    தசரதன் மகனாகிய ராமனின் நண்பன் சுக்ரீவனின்
    (சத்துருவின் பத்தினியின்)
    எதிரியாகிய வாலியின் மனைவியின்
    (காலை வாங்கித் தேய்)
    பெயர் தாரை காலை எடுத்து விட்டால் தரை தரையில் தேய்

    ReplyDelete
  2. பால்ய நினைவுகளை மீட்டெடுக்கிறது தங்களின் வலைப்பூ.. நன்றி! வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  3. நன்றி! தங்கம்பழனி அவர்களே!

    ReplyDelete