Saturday, October 9, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 5

1.
ஞாயிற்றுக்கிழமை நகையைக் காணோம்
திங்கட்கிழமை திருடன் கிடைத்தான்
செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்குப் போனான்
புதன்கிழமை புத்தி வந்தது
வியாழக்கிழமை விடுதலை ஆனான்
வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தான்
சனிக்கிழமை சாப்பிட்டுப் படுத்தான்.

2.
அயிரு வந்தாராம்
தயிரு குடிச்சாராம்
மாடிக்குப் போனாராம்
ரேடியோ போட்டாராம்
'சின்னக் குயில் பாட்டு பாடுது
அயிரு தலைக்குடுமி ஆடுது'

No comments:

Post a Comment