ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினை
பொரியரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்
சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை
யுள்ளினென் அல்லனோ யானே யுள்ளிய
வினைமுடித் தன்ன இனியோண்
மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே
பாடியவர் : இளங்கீரனார்
திணை : பாலை
துறை : முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.
பொருள் :
ஈன்பருந்து உயவும் - தனது பார்ப்பை ஈன்ற பருந்து வருந்துகின்ற
வான்பொரு நெடுஞ்சினை பொரியரை வேம்பின் - வானளாவ உயர்ந்த நெடிய
கிளைகளைக் கொண்டதும், சிறிய அடியை உடையதுமாகிய வேப்ப மரத்தின்
புள்ளி நீழல் - சிறு நிழலில்
கட்டளை அன்ன - தரத்தை அறிய உதவும் கல் போன்று, விளையாட்டிற்குத் தேவையான அடிப்படைக் கோடுகள் கொண்டு (Basic lines using which the rules of the game are determined)
வட்டு அரங்கு இழைத்து - வட்டு விளையாட்டிற்கான அரங்கம் அமைத்து
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் - பாமரச் சிறுவர்கள் நெல்லி வட்டு (நெல்லிக்காயைக் கோலிக்குண்டாகக் கொண்டு) விளையாடும்
வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர் - வில்லேந்திய வேடர்கள் வாழும் வெவ்விய சிற்றூர்
சுரன்முதல் வந்த - வழியே வந்த
உரன்மாய் மாலை - களைப்பினால் வலிமை இழந்த மாலையில்
உள்ளிய வினைமுடித்து அன்ன இனியோள் - எண்ணிய செயலை முடித்தலால் பெறும் மகிழ்ச்சியைப் போன்ற இனியவள்
மனைமாண் சுடரொடு - வீட்டில் பெருமைமிக்க தீபமாகிய விளக்கை ஏற்றி வைத்து
படர்பொழுது எனவே - (ஏக்கத்துடன் காத்திருந்து கழிக்கும்) இருள் படர்ந்துகொண்டிருக்கும் பொழுது என
உள்ளினென் அல்லனோ யானே - நான் நினைத்தவன் அல்லவோ
அருஞ்சொற்பொருள்:
ஈன் - ஈனும், பெற்றெடுக்கும்
உயவும் - வருந்தும்
வான்பொரு - வான் அளாவும்
நெடுஞ்சினை - நெடிய கிளை
சினை - உறுப்பு (கிளை)
பொரியரை - மரத்தின் பொரிந்த அரைப்பகுதி (அடிப்பகுதி)
நீழல் - நிழல்
அன்ன - போன்ற
உள்ளிய - நினைத்த
இலக்கணக்குறிப்பு:
ஈன்பருந்து - வினைத்தொகை
பொருநெடுஞ்சினை - வினைத்தொகை
நெடுஞ்சினை - பண்புத்தொகை
நெடுஞ்சினை பொரியரை - உம்மைத்தொகை
பொரியரை - வினைத்தொகை
அன்ன - உவம உருபு
கல்லா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
சிறாஅர் - இசைநிறை அளபெடை
வெம்முனை - பண்புத்தொகை
சீறூர் - பண்புத்தொகை
உரன்மாய் மாலை - வினைத்தொகை
பொரியரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்
சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை
யுள்ளினென் அல்லனோ யானே யுள்ளிய
வினைமுடித் தன்ன இனியோண்
மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே
பாடியவர் : இளங்கீரனார்
திணை : பாலை
துறை : முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.
பொருள் :
ஈன்பருந்து உயவும் - தனது பார்ப்பை ஈன்ற பருந்து வருந்துகின்ற
வான்பொரு நெடுஞ்சினை பொரியரை வேம்பின் - வானளாவ உயர்ந்த நெடிய
கிளைகளைக் கொண்டதும், சிறிய அடியை உடையதுமாகிய வேப்ப மரத்தின்
புள்ளி நீழல் - சிறு நிழலில்
கட்டளை அன்ன - தரத்தை அறிய உதவும் கல் போன்று, விளையாட்டிற்குத் தேவையான அடிப்படைக் கோடுகள் கொண்டு (Basic lines using which the rules of the game are determined)
வட்டு அரங்கு இழைத்து - வட்டு விளையாட்டிற்கான அரங்கம் அமைத்து
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் - பாமரச் சிறுவர்கள் நெல்லி வட்டு (நெல்லிக்காயைக் கோலிக்குண்டாகக் கொண்டு) விளையாடும்
வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர் - வில்லேந்திய வேடர்கள் வாழும் வெவ்விய சிற்றூர்
சுரன்முதல் வந்த - வழியே வந்த
உரன்மாய் மாலை - களைப்பினால் வலிமை இழந்த மாலையில்
உள்ளிய வினைமுடித்து அன்ன இனியோள் - எண்ணிய செயலை முடித்தலால் பெறும் மகிழ்ச்சியைப் போன்ற இனியவள்
மனைமாண் சுடரொடு - வீட்டில் பெருமைமிக்க தீபமாகிய விளக்கை ஏற்றி வைத்து
படர்பொழுது எனவே - (ஏக்கத்துடன் காத்திருந்து கழிக்கும்) இருள் படர்ந்துகொண்டிருக்கும் பொழுது என
உள்ளினென் அல்லனோ யானே - நான் நினைத்தவன் அல்லவோ
அருஞ்சொற்பொருள்:
ஈன் - ஈனும், பெற்றெடுக்கும்
உயவும் - வருந்தும்
வான்பொரு - வான் அளாவும்
நெடுஞ்சினை - நெடிய கிளை
சினை - உறுப்பு (கிளை)
பொரியரை - மரத்தின் பொரிந்த அரைப்பகுதி (அடிப்பகுதி)
நீழல் - நிழல்
அன்ன - போன்ற
உள்ளிய - நினைத்த
இலக்கணக்குறிப்பு:
ஈன்பருந்து - வினைத்தொகை
பொருநெடுஞ்சினை - வினைத்தொகை
நெடுஞ்சினை - பண்புத்தொகை
நெடுஞ்சினை பொரியரை - உம்மைத்தொகை
பொரியரை - வினைத்தொகை
அன்ன - உவம உருபு
கல்லா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
சிறாஅர் - இசைநிறை அளபெடை
வெம்முனை - பண்புத்தொகை
சீறூர் - பண்புத்தொகை
உரன்மாய் மாலை - வினைத்தொகை
No comments:
Post a Comment