Wednesday, June 8, 2022

பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணம்

தனதன தான தனதன தான

தந்தன தந்தன தந்தன தந்த

தனதன தந்த தனதன தந்த

தானன தானன தானன தந்த

            ----- தந்ததன தான தனதானனா

 

ஒருமட மாதும் ஒருவனு மாகி

இன்பசு கந்தரும் அன்புபொ ருந்தி

உணர்வுக லங்க ஒழுகிய விந்து

ஊறுசு ரோணித மீதுக லந்து

 

பனியிலொர் பாதி சிறுதுளி மாது

பண்டியில் வந்துபு குந்துதி ரண்டு

பதுமவ ரும்பு கமடமி தென்று

பார்வைமெய் வாய்செவி கால்கைக ளென்ற

 

உருவமு மாகி உயிர்வளர் மாதம்

ஒன்பது மொன்றி நிறைந்தும டந்தை

உதரம கன்று புவியில்வி ழுந்து

யோகமும் வாரமும் நாளும றிந்து

 

மகளிர்கள் சேனை தரவணை யாடை

மண்பட வுந்தி உதைந்துக விழ்ந்து

மடமயில் கொங்கை அமுதம ருந்தி

ஓரறி(வு) ஈரறி வாகிவ ளர்ந்து

 

ஒளிநகை யூறல் இதழ்மட வாரும்

உவந்துமு கந்திட வந்துத வழ்ந்து

மடியிலி ருந்து மழலைமொ ழிந்து

வாஇரு போஎன நாமம்வி ளம்ப

 

உடைமணி யாடை அரைவட மாட

உண்பவர் தின்பவர் தங்களொ டுண்டு

தெருவிலி ருந்து புழுதிய ளைந்து

தேடிய பாலரொ டோடிந டந்து

       ---- அஞ்சுவய தாகி விளையாடியே

 

உயர்தரு ஞான குருஉப தேசம்

முத்தமி ழின்கலை யும்கரை கண்டு

வளர்பிறை யென்று பலரும்வி ளம்ப

வாழ்பதி னாறுபி ராயமும் வந்து

 

மயிர்முடி கோதி அறுபத நீல

வண்டிமிர் தண்தொடை கொண்டைபு னைந்து

மணிபொனி லங்கு பணிகள ணிந்து

மாகதர் போதகர் கூடிவ ணங்க

 

மதனசொ ரூபன் இவனென மோக

மங்கையர் கண்டும ருண்டுதி ரண்டு

வரிவிழி கொண்டு கழியவெ றிந்து

மாமயில் போலவர் போவது கண்டு

 

மனதுபொ றாமல் அவர்பிற கோடி

மங்கல செங்கல சந்திகழ் கொங்கை

மருவம யங்கி இதழமு துண்டு

தேடிய மாமுதல் சேரவ ழங்கி

 

ஒருமுத லாகி முதுபொரு ளாயி

ருந்தத னங்களும் வம்பிலி ழந்து

மதனசு கந்த விதனமி தென்று

வாலிப கோலமும் வேறுபி ரிந்து

 

வளமையு மாறி இளமையு மாறி

வன்பல்வி ழுந்திரு கண்களி ருண்டு

வயதுமு திர்ந்து நரைதிரை வந்து

வாதவி ரோதகு ரோதம டைந்து

      --- செங்கையினில் ஓர்த டியுமாகியே

 

வருவது போவ தொருமுது கூனு

மந்தியெ னும்படி குந்திந டந்து,

மதியும ழிந்து செவிதிமிர் வந்து

வாயறி யாமல்வி டாமல்மொ ழிந்து

 

துயில்வரு நேரம் இருமல்பொ றாது

தொண்டையு நெஞ்சுமு லர்ந்துவ றண்டு

துகிலுமி ழந்து சுணையும ழிந்து

தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு

 

கலியுக மீதில் இவர்மரி யாதை

கண்டிடு மென்பவர் சஞ்சலம் மிஞ்ச

கலகல வென்று மலசலம் வந்து

கால்வழி மேல்வழி சாரந டந்து

 

தெளிவுமி ராமல் உரைதடு மாறி

சிந்தையு நெஞ்சமு மலைந்தும ருண்டு

திடமுமு லைந்து மிகவும லைந்து

தேறிநல் லாதர வேதென நொந்து

 

மறையவன் வேதன் எழுதிய வாறு

வந்தது கண்டமும் என்றுதெ ளிந்து 

இனியென கண்டம் இனியென தொந்தம்

ஏதினி வாழ்வுநி லாதினி நின்ற

 

கடன்முறை பேசும் எனவுரை நாவு

முழங்கிவி ழுந்துகை கொண்டுமொ ழிந்து 

கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து

பூதமு நாலுசு வாசமும் நின்று

    --- நெஞ்சுதடு மாறி வருநேரமே

 

வளர்பிறை போல எயிறுமு ரோம

முஞ்சடை யுஞ்சிறு குஞ்சியும் விஞ்ச

மனதுமி ருண்ட வடிவுமி லங்க

மாமலை போல்யம தூதர்கள் வந்து

 

வலைகொடு வீசி உயிர்கொடு போக 

மைந்தரும் வந்துகு னிந்தழ நொந்து

மடியில்வி ழுந்து மனைவிபு லம்ப

மாழ்கின ரேஇவர் காலம றிந்து

 

பழையவர் காணும் எனுமய லார்கள்

பஞ்சுப றந்திட நின்றவர் பந்தர்

இடுமென வந்து பறையிட முந்த

வேபிணம் வேகவி சாரியும் என்று

 

பலரையும் ஏவி முதியவர் தாமி

ருந்தச வங்கழு வுஞ்சில ரென்று

பணிதுகில் தொங்கல் களபம ணிந்து

பாவக மேசெய்து நாறுமு டம்பை

 

வரிசைகெ டாமல் எடுமென ஓடி

வந்திள மைந்தர்கு னிந்துசு மந்து

கடுகிந டந்து சுடலைய டைந்து

மானிட வாழ்வென வாழ்வென நொந்து

 

விறகிடை மூடி அழல்கொடு போட

வெந்துவி ழுந்துமு றிந்துநி ணங்கள்

உருகியெ லும்பு கருகிய டங்கி

ஓர்பிடி நீறுமி லாதவு டம்பை

  --- நம்புமடி யேனை இனியாளுமே

No comments:

Post a Comment