Friday, September 24, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 2

1. திரிதிரி பந்து

திரிதிரி பந்து
திருநாள் பந்து!
திரும்பிப் பார்த்தா,
ஒரு கொட்டு!

2. குத்தாங் குத்தாந் தாமாளம்

குத்தாங் குத்தாந் தாமாளம்
கோடாலி தாமாளம்

உங்கப்பன் பேரு என்ன? முருங்கப்பூ
முருங்கப் பூவத் தின்னவனே!
பாலும் பழமும் குடிச்சவனே!
பாப்பாத்தியம்மா கையெடுத்துக்கோ!

நெத்தியில என்ன? ரத்தம்
வழிச்சிக் கடாசு
போச்சா போகலையா? போகல
சுடுதண்ணி ஊத்திக் கழுவு.
வாயில என்ன? பச்சரிசி
துப்பு
காதுல என்ன? கம்மல்
கழட்டிக் கடாசு
மூக்குல என்ன? மூக்குத்தி
கழட்டிக் கடாசு
கழுத்துல என்ன? செயினு
அவிழ்த்துக் கடாசு
கையில என்ன? வளையல்
கழட்டிக் கடாசு
கால்ல என்ன? கொலுசு
கழட்டிக் கடாசு
வயித்துல என்ன? பூனைக்குட்டி.
எத்தனை? நாலு.
எனக்கு ஒன்னு தர்றியா?
தரமாட்டேன்.
(கிச்சு கிச்சு மூட்டுதல்)

3. கண்ணாமூச்சி விளையாட்டு

உங்கம்மா என்ன சோறு போட்டாங்க?
புளி சோறு.
ஈ மொய்த்ததா எறும்பு மொய்த்ததா?
எறும்பு மொய்த்தது
எடுத்து சாப்பிட்டாயா எடுக்காம சாப்பிட்டாயா?
எடுத்து சாப்பிட்டேன்.
சரி, போய் ஒரு வெத்தல, பாக்கு, சுண்ணாம்பு, வெல்லம் எல்லாம் வாங்கிட்டு வா

No comments:

Post a Comment