Tuesday, September 7, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே!

     சின்ன வயதில் நினைவாற்றலை வளர்க்கவும், வார்த்தைகள் பழகவும் சொல்லிக் கொடுக்கப்பட்ட தொடர் வரிகள் திடீரென்று நினைவுக்கு வந்தன. அவை சந்த நயமுள்ளவை. எனக்கு நினைவில் இருக்கும் இரண்டு தொடர்களைக் கீழே கொடுக்கிறேன்.

1.ரிப்பன் ரிப்பன் - கும்மாங் குத்து

ரிப்பன் ரிப்பன்

என்ன ரிப்பன்?
பச்சை ரிப்பன்

என்ன பச்சை?
மா பச்சை

என்ன மா?
டீச்சரம்மா

என்ன டீச்சர்?
கணக்கு டீச்சர்

என்ன கணக்கு?
வீட்டுக் கணக்கு

என்ன வீடு?
மாடி வீடு

என்ன மாடி?
மொட்டை மாடி

என்ன மொட்டை?
பழனி மொட்டை

என்ன பழனி?
வட பழனி

என்ன வடை?
ஆமை வடை

என்ன ஆமை?
குளத்தாமை

என்ன குளம்?
திரிகுளம்

என்ன திரி?
விளக்குத்திரி

என்ன விளக்கு?
குத்து விளக்கு

என்ன குத்து?
கும்மாங் குத்து...

(பாவம் பக்கத்தில் இருப்பவர்)

2. கொழுகட்டை - எறும்பு

கொழுகட்டை கொழுகட்டை ஏன் வேகல?
அடுப்பு எரியல நான் வேகல

அடுப்பே அடுப்பே ஏன் எரியல?
விறகு காயல நான் எரியல

விறகே விறகே ஏன் காயல?
மழை பெஞ்சிச்சு நான் காயல

மழையே மழையே ஏன் பெஞ்ச?
புல்லு முளைய நான் பெஞ்சேன்?

புல்லே புல்லே ஏன் முளைஞ்ச?
மாடு மேய நான் முளைஞ்சேன்

மாடே மாடே ஏன் மேஞ்ச?
பாலு கறக்க நான் மேஞ்சேன்?

பாலே பாலே ஏன் கறந்த?
பாப்பா அழுதுச்சு நான் கறந்தேன்?

பாப்பா பாப்பா ஏன் அழுத?
எறும்பு கடிச்சுச்சு நான் அழுதேன்?

எறும்பே எறும்பே ஏன் கடிச்ச?
என் புத்துக்குள்ள கைவிட்டா நான் சும்மா இருப்பேனா?


No comments:

Post a Comment